Tamil poems

அகரத்தின் முதலும் நீ
ஆர்வத்தின் முடிவும் நீ
இயற்கையின் பொருளும் நீ
ஈசனின் நேசமும் நீ

உயிருக்குள் சுவாசமும் நீ
ஊழ்வினையின் பாடமும் நீ
எட்டாத பாவமும் நீ
ஏகம்பனின் அருளும் நீ

ஐந்து வேதங்களின் பிறப்பிடம் நீ
ஒன்றிப்பின் தனித்துவம் நீ
ஓம்காரத்தில் ஒளியும் நீ
ஔதாரியத்தின் உயரம் நீ

சர்வ உயிரையும் காக்கும் ஜோதியின் அருள் 
நம் உள்ளத்தில் வசிக்கும் மிகுந்த மெய்ப்பொருள்  


நினைவில் உன்னையே பூஜிக்க வேண்டும் 
அறிவை உன்னை சுற்றி வளர்க்க வேண்டும் 

பார்வைகள் உன்னை எங்கெங்கும் காண வேண்டும் 
உயிர் மூச்சாக உன்னையே சுவாசிக்க வேண்டும் 

வார்த்தைகள் உன்னையே போற்ற வேண்டும்
சர்வ ஸ்வரங்களில் உன்னை ரசிக்க வேண்டும்

பக்தியில் உன் சர்வத்தை அறிய வேண்டும்
அன்பின் உச்சியில் உன்னை உணர வேண்டும்

உன் சேவை பசியில்  மனம் துடிக்க வேண்டும்
அதற்க்காகவே பல முறை பிறக்க வேண்டும்

ஒவ்வொரு நடை உன்னுடனேயே நடக்க வேண்டும்
உன் பாதையில் எப்பொழுதும் செல்ல வேண்டும்

உச்சியிலிருந்து உள்ளம் வரை உனக்கே அர்ப்பணம்
சர்வமய சம்பூரண சமர்ப்பணம் 

பிறவியின் அருள் பந்தம் காண்பதற்கு 
கர்மாவின் பலததையும் சோதித்துப் பார்ப்போமே

வாழ்க்கையின் சத்தியத்தை அறிவதற்கு 
தரமத்தின் பாதையில் பயணித்து பார்ப்போமே

கல்வியின் தத்துவத்தை காண்பதற்கு 
அறிவின் ஆழத்தை ரசித்து பார்ப்போமே

ப்ரம்மத்தின் ஞானத்தை உணர்வதற்கு   
கடவுளை ஒரு முறை தான் நேசித்து பார்ப்போமே

அவனை நினைக்காத சிந்தனையில் அறிவு இல்லை
அவனை காணாத கண்களில் ஒளி இல்லை

அவனை எண்ணாத மனதில் தூய்மை இல்லை
அவனை கேட்காத செவியில் ஒலி இல்லை

அவனை பாடாத மொழியில் வார்த்தை இல்லை
அவனை உணராத உடலில் உயிர் இல்லை

அவனை வணங்காத கரங்களில் செயல் இல்லை
அவனை பின்பற்றாத அடிகளில் திசை இல்லை 

ராம்ம இல்லாத ஞானம் இல்லை
அவன் இல்லாத இடத்தில என் மூச்சில்லை!

ஒவ்வொரு அடியில் ராம் ராம் 
ஒவ்வொரு படியிலும் ராம் ராம் 
ஒவ்வொரு நாடியில் ராம் ராம் 
ஒவ்வொரு வினாடியில் ராம் ராம் 
ஒவ்வொரு சுவாசத்தில் ராம் ராம் 
ஒவ்வொரு பாவத்தில் ராம் ராம் 
ஒவ்வொரு துடிப்பிலும் ராம் ராம் 
உயிரின் பிடிப்பிலும் ராம் ராம் 

கடமையை கடனாக காணாதே 
சொந்தங்களை சுமையாக சேர்க்காதே

தாய் தந்தையை தடையாக தாண்டாதே 
நன்றியை நோயாக நினைக்காதே

பணத்தை பிறந்த பலனாக பார்க்காதே 
மண்ணின் மரியாதையை மறக்காதே

யாசித்த யாவையும் யோகியாக யோசிக்காதே
ருணத்தின் ரகசியத்தை ரசிக்காதே

லோகத்தின் லாபங்களை லட்சியமாக்காதே
வஞ்சத்தில் விழுந்தவரை வெறுக்காதே

உன்னுடைய பயணமே வாழ்க்கை ஆனாலும் 
வாழ்க்கை தர்மத்தில் வெற்றியை அடையும் 


 


Be the first to post a comment.